மூச்சுவிடவும் முடியவில்லை
முந்தானை தொடவும் திராணியில்லை
காதலை தொட முடிந்த எனக்கு
வாழ்க்கையை படிக்க அறிவுமில்லை.
ஓடி ஓடி வந்தவள் - என்னை
இடையில் விட்டு மிடுக்காய் மறைந்தாள்.
அவளுக்கு இரக்கமும் இல்லை.
எனக்கு இரவுகள் தொல்லை.
மூச்சுவிடவும் முடியவில்லை - இன்னொரு
முந்தானை தொடவும் திராணியில்லை!
1 comment:
வலி மிகும் வரிகள்.
Post a Comment