நீண்ட நாட்கள் விடுமுறை நம்மை மட்டுமல்ல நம்மட வீட்டாட்களையும் சலிப்படைய வைத்துவிடுகிறது! சரி, ஏதாச்சும் எழுதலாம் என்று புலம்பலை திறந்தால் இந்த கொசுத்தொல்லை (கொசுக்கள் காற்றிலும், செல் போனிலும்... தாங்க முடியலப்பா!..). சரி ஒருவாறு அமர்ந்தால், "தம்பி இம்முறை ஜெனிவா போய் வரும்பொழுது போன முறைமாரி கண்ட கண்ட பொம்பிள பிள்ளைகளுக்கெல்லாம் அது இது எண்டு வாங்கி வாறது இல்லை.... சரியா..." அம்மா சமையல் அறைக்குள் இருந்து ஒரு கூக்குரல். ஸ்ஸப்பா.... எவ்வளவு கஷ்டப்படுத்துராங்கையா காலங்காத்தாலேயே.. கொஞ்சம் கடுப்போடு, சரி எழுத ஆரம்பிக்கலாம் என்ற பொழுது இந்த நாசமாய்ப் போன போனு... ரிங் ரிங்...
ஹலோ... (கொட்டாவி விட்டபடி நான்.)
ஹலோ... (தெம்பாய் ஒரு பிகரு அந்தப்பக்கம்.)
யாரு..??
என்னைத் தெரியாதா உங்களுக்கு மிஸ்டர் அமல்ராஜ்?
சாரி.. எண்ட போனில வீடியோ கால் இல்லேங்க!
அந்த தெரியாதா இல்ல...
அப்ப எந்த தெரியாதா???
ஐயோ.. பேசுற நான் யாரு எண்டு தெரியாதா எண்டு கேட்டன்..
(கடுப்பேறியபடி நான்.....)
சொன்னாத்தானே தெரியும்! நான் என்ன சட்டலயிட்டா???
சரி... சூடாகாதேங்கோ அமல்ராஜ்..
சரி நான் சூடாகிறது இருக்கட்டும் நீங்க யாருன்னு சொல்லுங்க மேடம்...
ச்சே கவலையா இருக்கு...
உங்க லவர் இன்னொருத்தியோட ஓடி போயிட்டானா??
என்னங்க இப்பிடி பேசுறீங்க?
நான் தூசனம் ஏதும் பேசலியே!
சரி அத விடுங்க...
எதங்க புடிச்சன் விடுறதுக்கு???
ஐயோ உங்களோட பேச முடியலியே...
அப்ப எதுக்கு கால் பண்ணினீங்க? லூசா நீங்க?
இல்ல யாரோடையாவது பேசணும்போல இருந்திச்சு...
நல்லா இருந்திச்சு... (கடுப்பெதுறார் மை லார்ட்..) அப்ப கஸ்டமர் கெயாருக்கு கால் பண்ண வேண்டியது.. அவிங்க பிரீயாத்தானே இருப்பாங்க!
சும்மா போங்க அமல்ராஜூ
ஐயோ எங்கங்க போவேன் இந்த காலையில.. பல்லு கூட விளக்கலேங்க! எதுக்கு கால் பண்ணினீங்கனு சொல்லுங்களேன்... (அழுவுற மாரி...)
கதைக்க புடிக்கலியா அமல்ராஜ்...???
பொண்ணுங்க எண்டாலே புடிக்காதுங்க நமக்கு! சப்பா... நீங்க யாருன்னு சொல்லுங்க அண்டி முதல்ல....
என்னது அண்டியா?? நானா??
(கொஞ்சம் சிரிப்பு எனக்குள்ள.... அண்டி எண்டதும் ரொம்ப பீல் பண்ணுது பொண்ணு..)
சாரி... சொல்லுங்க தங்கச்சி... உங்க பேரு என்ன??
தங்கச்சி.... அண்டிய விட பரவாயில்ல...
ரொம்ப முக்கியம்!! யோவ்வ்வ்.... உங்களுக்கு என்னதான் வேணும்?
(நீங்கதான் வேணும்னு சொல்லிடுமோ... என்ற நெனைப்பு வேற கொஞ்சம் நமக்கு......)
கேட்டால் கிடைக்குமா?
என்னங்க நான் என்ன மளிகைக் கடையா வச்சிருக்கன்??
சரி, விசயத்துக்கு வாறன்...
அப்பாடா..!!!
நான் உங்ககூட கொஞ்சம் பேசணும்!
(கொய்யாலே... இவ்வளவு நேரமும் என்ன்ன பாண்டியா விளாடிக்கிண்டிருந்தீங்க என்கூட....)
இவ்வளவு நேரமும் இதைத்தானே தம்மு கட்டி பேசிக்கிட்டு இருந்தீங்க...
சரி... முக்கியமான விஷயம்...
சரி சொல்லுங்க.... (என்னவா இருக்கும்... ஒரு வேளை இதுவா இருக்குமோ...???? அல்லது அதுவா இருக்குமோ???)
உங்க பிரெண்டு யாரையும் லவ் பண்ணுறாரா?
என்னது இளவா.. சாரி லவ்வா?? நீங்க யாருங்க??
அது இருக்கட்டும்! கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..ப்ளீஸ்...
(ஓவரா குனியுதே இந்த பொண்ணு....)
ஆமா! லவ்வு பண்ணுறான்.
யார?
ஒரு பொண்ணத்தான்!
ச்சே... சீரியஸ்ஸா பேசுங்க...
எனக்கு சீரியஸ் ஒண்ணும் இல்லையே.. நல்லாத்தானே இருக்கன்.
சொல்லுங்க அண்ணா ப்ளீஸ்!
(அண்ணாவா வா வா வா ...)
யெஸ்!
அவங்க பேரு என்ன?
ஜொபித்தா!
உண்மையாவா?
ஆமா! செத்துப்போன உங்க பெரியப்பா மேல சத்தியமா!
ஹி ஹி ஹி.... (இது அந்த பொண்ணு...)
அதுக்கு எதுக்கு சத்தியெடுக்குறீங்க...
ஐயோ சத்தியில்ல.... சிரிச்சன்!
ஒஹ்... அது சிரிப்பா??? சரி, நீங்க யாருனு இப்பயாச்சும் சொல்லுங்க!
நான் ஜொபித்தா!!
என்னது? ஜொபித்தாவா?? சத்தியமாவா?
ஆமா அமல் அண்ணா!
எதுக்கு இப்பிடி ஒரு வேலை பண்ணினீங்க? எதுக்கு அப்பிடியொரு கேள்வி? இது உங்களுக்கு தெரியாதா?
தெரியும் அண்ணா? பட் யாரும் கேட்டா வேற யாரையும் சொல்லிடுவீங்களோ எண்டு நினைச்சன். அவன் அப்பிடிதான் தான் லவ் பண்ணுற பொண்ணு யாரோ மைதிலினு சொல்லிதிரியிரானாம் ராஸ்கோல்.... ( அவன் - அதுதான் நம்ம நட்பு தானுங்க..)..
ஐயோ.... எதுக்கு அவன் அப்பிடி????
தெரியல.... அவர்ட அடிக்கடி ஞாபகமூட்டி விடுங்கண்ணா... அவர்ட லவர் நான் தான் எண்டு....
(சுத்தம்!! நல்ல வேலை நமக்கு!! நல்லா வருவீங்கடி நீங்க!!!)
சரி சரி ஜோபித்தா.... எதுக்கு அழுவுறீங்க... ஹெய் ஜொபித்தா....
போன் கட்!!
--------------------------------------
இதென்னடா காலாங்காத்தால இந்த மதுரைக்கு வந்த சோதனை! சிவனே எண்டு சும்மாதானே இருக்கேன் நானு! என்னங்க இவிங்க பிரச்சனை?
அடேய் மவனே (எண்ட நண்பனுக்கு சொல்றேனுங்க..), லவ்வு பண்ண தெரிஞ்சா அத உண்ட வீட்டுக்குள்ள வச்சுக்க முயற்சி செய்துக்கொடா மச்சி. உண்ட லவ்வோ லவ்வு ரோட்டுக்கெல்லோ வந்துடுச்சி... ஏண்டா நீ பெரிய அப்பாடக்கரா? ஒரு பொண்ணு உன்னைய விழுந்து விழுந்து லவ்வுது... நீ எதுக்குடா இன்னொருத்திகூட நூலு விடுறே? ஒருத்தனுக்கு எழும்பி நிக்கவே வக்கில்லையாம் அதுக்குள்ளே ஒனக்கு ஒன்பது கேக்குதா?? நல்லா வருவீடா நீயி!
இன்னொருக்கா அந்த ஜொபித்தாகிட்ட இருந்து அழைப்பு வந்திச்சின்னு வையி, ஒன்னைய கொன்னே புடுவன்! ஆமா!!
அதவிட, தெரியாம நம்ம நண்பன் லவ்வரையா இப்பிடி கலாய்ச்சிட்டன்.. சரியில்லையே.. நாளைக்கு நம்மள இவிங்க என்ன நினைப்பாங்க... சரி சரி நெனைக்கட்டும்...
இல்ல நான் தெரியாமத்தான் கேக்குறன், உங்களுக்கெல்லாம் வேற வேல வெட்டியே இல்லைங்களா?? போய் வேலையப்பாருங்கையா...