உன்னை
ஊருக்கு வெளியேதான்
பார்த்திருக்கிறேன் - இப்பொழுது
உயிருக்குள்
எப்படி வந்தாய்?
உன்னைப் போன்ற
அழகிகளை
சரித்திரத்தில் பார்த்திருக்கிறேன்..
இப்பொழுதுதான்
முதல் முதல் - என்
உதிரத்தில் பார்க்கிறேன்..
இதயத்தில் இவளா..?
லப்பும் டப்பும்
சுருதியில் பிளைக்கிறதே..
குருதியும் குழாய்களில்
கோணலாய் ஓடுகிறதே..
வந்த ரத்தமும்
இதய சத்தமும்
மிச்சமின்றி முடிகிறதே.
ஏப்பம் விட்ட வாயும்
ஓலம் இட்ட நாவும் - இப்போ
ஆரோகணம் படிக்கிறதே..
இதயத்தில் இவளா..??
துடிக்கும் மோகமும்
வெடிக்கும் காமமும்
சத்தமின்றி கசிகிறதே..
துடிக்கும் கனவும்
நடிக்கும் நினைவும்
எட்டிநின்று மரிக்கிறதே.
மீண்டும் இதயத்தில் இவளா??
மீண்டும் பறிக்க நான் இதழா??
நிலவு பார்த்து
கொட்டாவி விடுகிறதே..
இவளை -
நெருங்க பார்த்து
என்னாவி முடிகிறதே..
இவளைப்பார்த்து பெண்ணா என்கிறதே - இதயம்
மலரை எப்பிடி பெண்ணென சொல்கிறதே..??
முட்டாமலே - என்னுள்
விபத்தை நடத்தினாள்
தட்டாமலே - என்னுள்
தடயத்தை வைத்தாள்.
எட்டிநடக்கும் இதய மழலையை
எப்படி காதலில் சிக்க வைத்தாள்.
அடித்துக்கொட்டும் மழையில் கூட
இப்படி எப்பிடி வேர்க்க வைத்தாள்..
பார்த்து வேர்த்து
ஆசை தீர்த்து
வீசி எறிந்து
வேண்டாம் என
வந்தவன் நான்..
உன்னிலே மரிக்க
உனக்காக எரிக்க
இன்னும் என்னை
விற்க முடியாது
உனக்கு..
அப்படியிருக்க - மீண்டும்
இதயத்துள் ஏன் வந்தாள்??
----
நன்றி லண்டன் தமிழ் வானொலி; கவிதை நேரம்.
இந்தக் கவிதையை ஒலிவடிவத்தில் கேட்பதற்கு;
No comments:
Post a Comment