
இந்த
இரவல்
இலக்கியத்தின்
ஒரு நிமிட
நாயகி அவள்.
ஐந்து மீட்டரில் அவள் - அன்று
ஐம்பது கனவுகளோடு நான்.
அன்று
பக்கத்தில் வந்தது
பௌர்ணமி - பெண்ணே
அனைத்தும் கலந்த
வர்ணம்நீ.
ஒருமுறை வந்தாள்
ஒரே முறைதான் சிரித்தாள்
ஓரிரு வரிகள் மட்டும் பேச
ஒருவாறு அனுமதி தந்தாள்.
நடு நாக்கு
நடுங்கியதில்
வந்த வாக்கு - அங்கேயே
முடங்கியது.
நாக்கு மேட்டில்
விழுந்து எழுந்து
நிமிர்ந்த வார்த்தை
உதட்டில் புரண்ட போது
'வருகிறேன்' என்றாள்
கண்களால்.
மீண்டும் வலிந்து
தொண்டையில் திணித்த - அந்த
மூன்றெழுத்து வார்த்தையை
சமாதானம் செய்வதற்குள்ளே
சாகப்போவதாய்
சத்தியாக்கிரகம் செய்தது
அவள் - என்
மனதில் விட்டுப் போன - அந்த
விடுப்புக் காதல்.
ஒரே நிமிடத்தில்
காதல் - இன்று
ஏனிந்த மனங்களிடையே
மோதல்..
அவளும்
வருவதாய் இல்லை.
நிலவும்
வளர்வதாய் இல்லை.
என்னைச்சுற்றிய காதல் இருள்
சொட்டுச் சொட்டாய்
குறைவதாயும் இல்லை.
வந்து போனவள் யார் - அன்றுமுதல்
என் மனதில் அக்கப்போர்.
ஒரே நிமிடம்
ஒரே பார்வை
விழுந்தது நான்
எழுந்தது அவள்.
இதுதான் காதலா?
மெல்லப் போனது
பாவை - இப்போ என்
கைகளிலெல்லாம் காதல்
ரேகை.
உதிர்த்துப் போனாள் ஒரு
சிரிப்பு,
யாருக்குத்தெரியும் - இப்போவென்
தவிப்பு??
என்னை - அவள்,
பூவிழி பார்வையில்
முடிந்து போனாளா?
இல்லை,
கரு நிற தோகையால்
கடைந்து போனாளா?
கண்ணிரு வீச்சிலே
மயக்கிப் போனாளா?
இல்லை - என்னை
பொன்னுருக்கும் பார்வையாலே
மடக்கிப் போனாளா?
ஒரே ஒரு சிரிப்பிலே
எனக்கு
ஊட்டியையும் கொடைக்கானலையும்
ஒரே நிமிடத்தில்
காட்டிப்போனவள்
அவள்.
புலம்பி புலம்பியே
புத்திகெட்டுப் போனது
எனது
காதல்,
வீதியில் அன்று
போட்டுவிட்டு வந்தாலும்
இன்றும் - என்
இலக்கிய நாயகி
அவளேதான்
என்
வலது சோணையிலே.
.
1 comment:
////என்னை - அவள்,
பூவிழி பார்வையில்
முடிந்து போனாளா?
இல்லை,
கரு நிற தோகையால்
கடைந்து போனாளா?
கண்ணிரு வீச்சிலே
மயக்கிப் போனாளா?
இல்லை - என்னை
பொன்னுருக்கும் பார்வையாலே
மடக்கிப் போனாளா?
////
அட காதல் ரசம் கொட்டுகின்றது அருமை பாஸ் சூப்பரா இருக்கு
Post a Comment