நாசமாய் போன
சதி காரனே..
உன்னை எப்படி
எந்த மூஞ்சியோடு
எனது
முந்தைய காதலன் என்று சொல்வேன்??
நீ
மூசி மூசி காதலிச்சது எல்லாம்
என் உயிரை அல்ல
உடலைதானே !!
அன்பு பாசம் என்றெல்லாம்
வேஷத்தை மட்டும் தானே காட்டி போனாய்.
அதற்குள் நீ கொடுத்த
பழைய பரிசுகள் வேறு...
தினம் தினம்
அவற்றை பார்க்கும் போதெல்லாம்
கடுப்பல்லவா வருகிறது
உன் மொக்கையாய் போன காதல் மேல்..
போனைய காதலர் தினத்தில்
என்னை கேட்ட நீ
இந்த காதலர் தினத்தில்
என் நண்பியை கேட்டது
ஆச்சரியம் இல்லை எனக்கு
காரணம்
நீ ஒரு புறம்போக்கு என்பதும்
நீ ஒரு முடிச்செருக்கி என்பதும்
எனக்கு நன்றாகவே தெரியும்.
நீ எல்லாம்
உருப்படுவதற்கு சந்தர்பம் உண்டோ
என்னை கேடுத்துப்போன காதலனே?
என்னிடம் காதலிக்க பழகி
அவளிடம் புலமை காட்டுகிறாயோ
காதல் லீலைகளில்..
ஒன்றை பார்.
காதலர் தினத்தில்
பிறந்தது நம் காதல்.
அதனாலோ என்னவோ
ஒவ்வொரு வருடமும்
நம் காதலை மறக்க முடியவில்லை
நாசமாய் போன கலண்டர்
ஞாபகப் படுத்திக்கொல்கிறது.
No comments:
Post a Comment