எறிந்து போன காதலனே,
எனது இறுதி ஆசையை கேட்டாயா?
பார்த்து பார்த்து தேய்ந்து போன கண்கள்,
பேசி பேசி மரத்து போன நாக்கு,
எண்ணி எண்ணி சுயமிழந்த மனசு,
அழுது அழுது வற்றிப்போன கண்ணீர்,
வருந்தி வருந்தி வாயிழந்த வயிறு,
இவை எல்லாம் நீ கொடுத்தாய் எனக்கு.
இவற்றை தவிர
உனக்கு கொடுக்க
என்ன இருக்கிறது என்னிடம்??
மரத்துப்போன என் காதலையும்
மானமிழந்த என் உடலையும் தவிர...
No comments:
Post a Comment