கனவு என்பது ஆசைகளின் வெளிப்பாடு என்ற ஓசோட கருத்தையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பல ஆசைகள் நிறைவேறாமல் போகிற போது அல்லது நிறைவேற காலம் எடுக்கிற போது கனவு உருவாகிறது. ஆக ஆசைக்கும் கனவுக்கும் இலட்சியம் ஒன்றுதான். பெண்களுக்கு அதிகம் பிடிச்ச விடயங்கள் தன் கணவனிடத்தில் அல்லது காதலனிடத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அல்லது பெண்கள் தங்களை கவர்ந்த விடயங்கள் தங்கள் ஆணிடம் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அது சாத்தியம் என்றால் எதிர்பார்ப்பு வளர ஆரம்பிச்சுவிடுகிறது. பெண்களின் இந்த ஆசை, பின்னர் கனவு, இறுதியில் எதிர்பார்ப்பு இந்த மூன்றுமே அநேக ஆண்களுக்கு ஆப்பாகதத்தான் அமைந்துவிடுகிறது. ஒரு விடயம் தங்களுக்கு சந்தோசத்தை தரும் என்று பெண்கள் நினைத்துவிட்டால் அதை கணவனிடத்தில் எதிர்பார்ப்பது யதார்த்தமானது. ஆனால், அது அந்த ஆணினால் எந்தளவிற்கு நடைமுறைப்படுத்த முடியும் என்பதை சிந்திக்க அதிகமான பெண்கள் மறந்துவிடுகிறார்கள். எதற்கும் மண்டையை ஆட்டும் ஜாதி இந்த ஆண் காதல் ஜாதி. (கொஞ்சம் ஓவரா இருக்கோ..) கொஞ்சம் கூட ஜோசிக்காமல் நம்ம ஆண்களும் "ஆமா செய்றன், உனக்கு இல்லாததா" எண்டு அறிக்கை விட்டுடுவினம். பின்னர் நடைமுறைப்படுத்த எத்தனிக்கும் பொழுது கோட்டை விட்டுடுவினம். இங்கதான் நம்ம பொண்ணுங்க ரொம்ப உசார். "சொன்னால் செய்யனும்" என்ற வரிகளை அனல் பறக்க, மூச்சுத்தெறிக்க உச்சரிப்பினம். அவர்கள் கடுப்பிலும் நியாயம் இருக்குத்தானே பாருங்கோ. ரஜினி மாதிரி செய்றதைத்தான் சொல்லுவன், சொல்லுறததான் செய்வன் எண்டு பஞ்சு டயலாக் பேசுறது நடைமுறை வாழ்க்கைக்கு சரிவருமுங்களா? ஆண்களும் கொஞ்சம் ஜோசிக்கணுமுங்க.. பெண்கள் மிருதுவானவர்கள் தானே.. (பாராட்டுக்கு நன்றி..)
ஒன்று செய்ய முடிஞ்சால் செய்யணும். இல்லையெண்டால் பெண்ணின் கனவு ஆசையாகும் போதே முடியாது எண்டு சொல்லிடனும். (ஆமா முடியாது எண்ணு சொல்லிடாமட்டும் விடவா போறாளுகள்.. எண்டு ஆண்கள் முணுமுணுக்கிறது புரியுது சார்...) இவ்வாறான நேர் பேச்சு அல்லது straight forward reaction குடும்பத்தில அல்லது காதலர்களுக்கு மத்தியில அதிகமான ஏமாற்றங்களையும் நீண்ட கால விரிசல்களையும் தடுக்கும் என்கிறது அந்த புத்தகம். உண்மைதானே?? ஆசை என்பது சிலவேளைகளில் கற்பனை மட்டும் கலந்த ஒரு தேடலாக கூட இருக்கலாம் இல்லையா. இவ்வாறான ஆசைகள் நிச்சயமாக பிணக்குகளைதான் ஏற்படுத்தும் என்பது எனது கருத்து. இந்த ஆசைகள் மட்டில் பெண்கள் மிக கவனமாக இருத்தல் அவசியம். தேவையானவற்றுக்கு மட்டும் எதிர்பார்ப்புக்களை வளர்த்தல் ஆண்களை கொஞ்சம் நின்மதியாக மூச்சுவிட அனுமதிக்கும். ஆண்களும் பெண்கள் குறைந்த பட்சம் ஆசைப்படும் சிறு சிறு விடயங்களில் நம்பிக்கை தன்மையை வளர்த்தல் உறவுக்கு ஆரோக்கியமானதாக இருக்கும். அதிகமான ஆசைகளை தங்கள் கணவனிடத்திலோ அல்லது காதலனிடத்திலோ திணிப்பது உறவு ஆரோக்கியமின்மையை தோற்றுவிக்கும் முதல் காரணி. அதையும் தாண்டி நம்மல்ல சில விறைச்ச அண்ணன்மார் இருக்கத்தான் செய்யுறாங்க. பொம்பிளைங்க எத ஜோசித்தாலும் அசைபட்டாலும் கடைசிவரை இவங்க கண்டே பிடிச்சுக்க மாட்டாங்க. சுத்த வேஸ்டுங்க. முக்கியமான விஷயம், தாங்கள் நினைப்பதை ஆண்கள் சரியாக புருஞ்சுகணும் எண்டு பெண்கள் அதிகம் எதிர்பார்ப்பாங்க. சிலநேரம் நாம சாத்திர காரனாவும் இருக்கோணுமுங்க. இது உண்மையான விடயம்.
சரி அத விடுங்க. எண்ட நண்பர் ஒருத்தர் கேக்கிறார், பொண்ணுங்க எத ஆக குறைஞ்ச பட்சம் எதிர்பாகிறாங்க நம்மட்ட?? இது நாம் இருக்கிற நிலையை பொறுத்தது. அடிப்படையில் அவர்களுடன் கணவனோ காதலனோ அவர்கள் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்களுடன் உணர்வு பூர்வமாக நடந்துகொண்டாலே அவர்களின் அரைவாசி எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற போதுமானதாக முடியும்.. என்னங்க நான் சொல்லுறது சரிதானே.. எதாச்சும் சொல்லுங்களேன்.. இரண்டாவது பெண்கள் அதிகம் தங்கள் துணையுடன் பேசவேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்கள். மனம் விட்டு பேசுறீங்களோ இல்லையோ வாய் விட்டு பேசினாலே அரைவாசி பிரச்சனை முடிஞ்சுடும்க. ஒண்ணு தெரியுமா, பெண்கள் ரொம்ப கூர்மையானவர்கள் (and sensitive). ஆண்கள் பொய் பேசும் பொழுது அவர்கள் 80% புரிந்துகொள்கிறார்கள் ஐயா டூப்புதான் விடுறார் எண்டு. இதை ஒரு ஆராச்சியும் சொல்லியிருக்குங்க. ஆண்கள் சொல்லும் பொய்களை பெண்கள் இலகுவாக கண்டுகொள்கிறார்கள் என்று. இதுதான் நம்மள்ள அதிகம் பேர் அவங்கட்ட பொய் சொல்லி முடியிரதுக்குள்ளவே மாட்டிக்கிறது.. பெண்களுக்கு தங்கள் ஆண்கள் நேர்மையாக இருக்க வேண்டும் அத்தோடு சகல விடயங்களையும் (100%) வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் அக்கறை கொண்டவர்கள். ஆக இந்த சிறிய அடிப்படை விசயங்களில ஆண்கள் சரியாக இருந்தாலே போதும், அவங்க அவங்க பெண்களின் கனவையும் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிச்சயமாக வெற்றிகொள்ளலாம்.
கவிஞர் அஷ்ரப் ஐயா சொல்லுவதபோல, வாசிசுபோட்டு சும்மா போகாதேங்கோ, ஒரு கருத்தையாவது பதிவு செய்திட்டு போங்க...
இன்னுமொரு தலைப்போடு தொடர்வேன் சீக்கிரத்தில்.
No comments:
Post a Comment